Skip to main content

"மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியையேற்று உண்ணாவிரத அறிவிப்பு வாபஸ்"- பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

"Withdrawal of the fast notice after taking the oath of the District Collector"- pR Pandian's announcement!

 

திருவாரூரில் பெரியக்குடி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கிணற்றை நிரந்தரமாக மூட அந்த நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பெரியக்குடி பகுதியில் ஓஎன்ஜிசி கிணற்றில், கடந்த 2013- ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டதால், போராட்டத்திற்கு பின்னர், அந்த கிணறு மூடப்பட்டது. அந்த கிணறு மீண்டும் திறக்கப்படவிருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வந்த நிலையில், அந்த கிணற்றை முற்றிலுமாக மூடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மே மாதத்திற்குள் ஹைட்ரோ கார்பன் கிணற்றை முற்றிலுமாக மூடுவதற்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் ஒத்துக் கொண்டதாக தெரிவித்தார். 

 

மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியையேற்று, சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக காவிரி விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்