Skip to main content

வேளாங்கண்ணி சுற்றுலா பயணிகளிடம் வம்புக்கிழுத்து உதைவாங்கிய காவலர்கள்!!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018

வேளாங்கன்னிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பிய மினி பஸ்சை சோதனை செய்வதாக கூறி பெண்களிடம் அத்துமீறிய காவலர்களுக்கு அடி பின்னியெடுத்துவிட்டனர். விசாரணைக்காக  திருவாரூர்  காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 30 சுற்றுலா பயணிகளை 4 மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

 

police

 

கர்நாடக மாநிலம் பெங்களுர் நகர் பகுதியை சோ்ந்த ராஜேஷ் தனது குடும்பத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களுடன் தஞ்சைக்கு ரயிலில் வந்து மினி பஸ்சை வாடகைக்கு எடுத்து கொண்டு வேளாங்கன்னிக்கு ஒரு வாரம் சுற்றுலாவாக வந்துள்ளனர். இன்று தங்களது சுற்றுலாவை முடித்து கொண்டு பெங்களுருக்கு செல்ல தஞ்சையில் ரயில் ஏற மினி பஸ்சில் மூலம் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.



அப்போது திருவாரூர் அருகே சோழங்கநல்லூர் என்ற இடத்தில் மதுவிலக்கு காவல் பிரிவை சோ்ந்த காவலர்கள் இளவரசன் மற்றும் சங்கர் இருவரும் ரஜேஷ் குடும்பத்தினர் வந்த மினி பஸ்சை குறுக்கே நின்று  நிறுத்தினர்.  காவலர்கள் இருவரும் காவலர் உடையிலில்லாததால் மினிபஸ்சின் ஓட்டுநர் இருவர் லிப்டு கேட்பதாக நினைத்துக்கொண்டு பஸ்சை நிறுத்தாமல் சென்றுள்ளார். காவலர்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் அந்த மினி பஸ்சை விரட்டி ஒரு கிலோமீீட்டர் தூரம் துரத்தி நிறுத்தினர், அப்போது ஓட்டுநரை பஸ்சை ஏன் நிறுத்த வில்லை என இருவரும் கேட்டு தாறுமாறாக திட்டிக்கொண்டே அடிக்கப்பாய்ந்தனர்.



அதோடு பஸ்சிற்குள் புகுந்து ஒவ்வொருவர் பைகளையும் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.  பஸ்சில் உள்ள பெண்கள் எங்கள் உடமைகளை சோதனை செய்ய நீங்கள் யார் என்று கேட்டுள்ளனர். காவலர்களோ, இருவரும் போலீஸ் என கூற அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி சுற்றுலா பயணிகள் கூறியுள்ளனர். ஆனால் காவலர்கள் இருவரும் அடையாள அட்டையை காண்பிக்காமல் பெண்களிடம் அத்துமீறி அவர்களை தாக்கி தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர்.

 


இதனையடுத்து வாகனத்தில் இருந்த அனைவரும்  சேர்ந்து   இருவரும் காவலர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டு அவர்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம்  அறிந்த வைப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மினி பஸ்சுடன் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


 

சுமார் 4 மணிக்கு அழைத்து சென்றவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் அமர வைத்து விட்டனர். சுற்றுலா பயணிகள் அனைவரும் மாலை 7 மணிக்கு ரயிலுக்கு செல்ல வேண்டும் என எவ்வளவு எடுத்து கூறியும் காவல்துறையினரின் காதுகளுக்கு எட்டவில்லை.



 இந்நிலையில் இந்த செய்தி ஊடகங்களில் வெளி வர காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் துறையினர் தலையிட்டு சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகளிடம் வருத்தம் தொிவித்து அவர்களை விடுவித்தனர்.

 


சுற்றுலா பயணிகள் தாங்கள் விடுவிக்கப்பட்டதற்கு ஊடகத்துறையினருக்கு நன்றி தொிவித்துவிட்டு மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினர். இந்த சம்பவத்திற்கு காவல்துறையினர் காவல் உடையில்லாதததும் அவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்காததும், பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டது தான் என சுற்றுலா பயணிகள் தொிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.