கோவை சிறையில் நேற்று முதல் மாணவி வளர்மதி உண்ணாவிரதம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க அவரது சகோதரர் இரண்டு பேருடன் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து 3 பேரின் இல்லத்திற்கு சென்ற போலீசார் இவர்களுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரித்துள்ளனர். அக்கம் பக்கத்திலும், உறவினர்ளிடமும் விசாரித்துள்ளனர். போலீசாரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து சிறையில் உள்ள வளர்மதி நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ஜீவா பாரதி