Published on 16/05/2022 | Edited on 16/05/2022
இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் 164வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் 931 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கவுள்ளார். தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார்.