Skip to main content

தினகரனுக்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

Published on 18/03/2018 | Edited on 18/03/2018
pis


அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி.தினகரன் நாளை புதுக்கோட்டையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தொடர்ந்து நெடுவாசல் சென்று ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சந்தித்து பேசுவதாக பயண திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் புதுக்கோட்டை வரும் தினகரனை வரவேற்க நகரம் முழுவதும் சுவரொட்டிகளும், பதாகைகளும் இரவோடு இரவாக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் உடல் நிலை பற்றிய தகவல்கள் வெளியானதால் தினகரன் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தினகரனை வரவேற்க ஒட்டப்பட்டுள்ள பல சுவரொட்டிகளில் நாளைய முதல்வரே வருக என்ற வாசகங்கள் இருந்தாலும் ஒரு சுவரொட்டியில் முதல்வரே வருக வருக என்ற வாசகங்கள் மட்டுமே உள்ளது.

இந்த சுவரொட்டிகளை பார்க்கும் ர.ர க்கள் முதல் பொதுமக்கள் வரை, முதல்வர் யார்? தினகரன் ஆதரவாளர்களின் ஆர்வத்திற்கு அளவே இல்லையா என்று பேசி வருகின்றனர். இந்த சுவரொட்டியால் புதுக்கோட்டை பரபரப்பாகி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்