Skip to main content

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்; பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Tragedy happened to the school student for Head-on collision vehicles

திருச்சி, மாவட்டம் சோமரசம்பேட்டை போசம்பட்டி அருகேயுள்ள நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கிஷோர் (14). இவர் கரூர் மாவட்டம், ஆர்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு, கிஷோர் தனது வீட்டிலிருந்து வியாழன்மேட்டில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். 

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமும், கிஷோர் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில், படுகாயமடைந்த கிஷோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், பள்ளி மாணவன் கிஷோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த விபத்தில், கிஷோர் வாகனம் மீது மோதிய, எட்டரை நடராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் (40) மற்றும் அவருடன் வாகனத்தில் அமர்ந்து வந்த கிருஷ்ணராஜன் ஆகிய இருவரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9ஆம் வகுப்பு மாணவன், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்