Skip to main content

"எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு செய்ததற்கு ஆதாரம் உள்ளது.." - அறப்போர் இயக்கம் உறுதி

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

J

 

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சாலை அமைப்பதில் இழப்பு ஏற்படுத்தியதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அறப்போர் இயக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரியும், உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்பியதற்காக ரூபாய் 1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்டுள்ள இந்த மனுவுக்கு விளக்கம் கேட்டு அறப்பேர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இதுதொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்துள்ள அறப்போர் இயக்கம், " நெடுஞ்சாலை டெண்டர்களில் எடப்பாடி பழனிசாமி முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்த புகாரை வலைத்தளத்தில் வெளியிடுவது அவதூறு இல்லை. ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்