Skip to main content

'கூட்டணி தர்மம் இருக்கிறது... அதற்காக குட்டு வாங்கிக்கொண்டே இருக்காது தேமுதிக...'- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் திருமணநாள் விழா இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் “மக்களுக்கு நன்மை செய்வதற்காக நான் திரும்ப வருவேன்” என கூறினார்.

 

There is a coalition dharma...  Premalatha Vijayakanth talk!

 

அதனைத்தொடர்ந்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நான் ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்வேன் துளசி கூட வாசம் மாறும் ஆனால் தவசி வார்த்தை மாறியதாக வரலாறு கிடையாது. கூட்டணி தர்மத்தை மதிக்கிறோம் அதற்காக குட்டினீர்கள் என்றால் குட்ட குட்ட குனிந்து வாங்கிக்கொள்ளாது தேமுதிக. நிமிர்ந்து எழுந்து நிச்சயமாக தேமுதிக இளைஞர்கள் மிகப்பெரிய சக்தி என்பதை நிச்சயம் நிரூபிப்போம் அதில் மாற்று கருத்து இல்லை என்றார்.

 

சார்ந்த செய்திகள்