Skip to main content

தூக்கில் தொங்கிய பயிற்சி மருத்துவர்; கொலையா என போலீசார் விசாரணை

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

thanjavur orathanadu veterinary college trainee doctor incident 

 

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் வசந்த் சூர்யா (வயது 23). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் நிலையில், தஞ்சாவூர் அருகில் உள்ள ரெட்டிபாளையம் கால்நடை மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வசந்த் சூர்யாவும், அவருடன் அதே கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்களான சிவராஜ் மற்றும் சதிஷ்குமாரும் மருத்துவமனையில் தங்கி உள்ளனர். சிவராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரும் மருத்துவமனையில் உள்ள அறையில் உறங்கி உள்ளனர். வசந்த் சூர்யா மருத்துவமனையில் வெளியே உள்ள முகப்பு அறையில் உறங்கி உள்ளார்.

 

இந்நிலையில், வசந்த் சூர்யா நேற்று காலை மருத்துவமனையின் வெளிப்புறத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் தூக்கில் பிணமாகத் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த் சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வசந்த சூர்யா படுத்திருந்த இடத்தில் மதுபாட்டில் ஒன்று இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வசந்த சூர்யா பயன்படுத்திய தொலைபேசியை கைப்பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர். வசந்த் சூர்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்