Skip to main content

ஸ்டெர்லைட் தீர்ப்பை மஜக வரவேற்கிறது: தமிமுன் அன்சாரி

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 

ஸ்டெர்லைட் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மஜக வரவேற்கிறது என்று மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும், 
 

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்றும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 

THAMIMUN ANSARI

 

இதை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என மனிதநேய ஐனநாயக கட்சி வரவேற்கிறது. மக்களின் கோரிக்கைகளையும், உணர்வுகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனத்தில் கொண்டிருப்பது மன நிறைவளிக்கிறது.
 

இது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். அதற்காக போராடி உயிர் நீத்த 13 தியாகிகளின் ரத்த துளிகளுக்கு கிடைத்த மரியாதையாகவும் மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது என கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்