Skip to main content

டாஸ்மாக் கடைகள் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம்! - அமைச்சரின் பேச்சால் ஆசிரியர்கள் அதிர்ச்சி!

Published on 26/08/2018 | Edited on 27/08/2018
minister kc


வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூரில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஜோலார்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அமைச்சர் வீரமணி பேசி கொண்டு இருக்கும்போது தீடீரென அதிமுக தொண்டர் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டார்.

அந்த அதிமுக தொண்டரால் பாதியில் பேச்சை நிறுத்திய அமைச்சர் போலீஸ் போலீஸ் என்று அழைத்து அவரை அப்புறப்படுத்த சொன்னார். அதன்பின் தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது அமைச்சர் ’டாஸ்மாக் கடை விற்பனை லாபத்தால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து கொண்டு இருக்கிறோம்’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சு ஆசிரியர்கள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் இடையே முகம் சுழிக்க வைத்ததோடு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்