Skip to main content

'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம்! 

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

 

chennai

 

சென்னை   - வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (22.2.2018) காலை 11 மணியளவில் சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை சார்பில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர் பங்கேற்று எழுச்சி முழக்கமிட்டனர். திராவிடர் மாணவர் கழக மாநில கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி வரவேற்றார்.  திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரையாற்றினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் சீ.தினேஷ் ஆர்ப்பாட்ட நோக்கவுரையாற்றினார்.

 

திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி மாநிலச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமாகிய சி.வி.எம்.பி.எழி லரசன்  நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று நீட்டை எதிர்ப்பது ஏன்? எனும் தலைப்பில் விளக்கவுரையாற்றினார்.

 

வழக்குரைஞர்  ஜெரால்டு, நா.பார்த்திபன், ப.சோமசுந்தர மூர்த்தி, வானவில் விஜய், தமீம் அன்சாரி, அ.சுரேஷ், முபின், ராமசாமி, வி.சேஷன், இரா.சத்தியகுமரன், முகவை இரா.சங்கர், பா.ஜெய்கணேஷ், எம்.அருணாச்சலம், ச.இராஜராஜ சோழன், ஈகை ஜி.சிவா, எச்.முகம்மது அசாருதீன், ஜி.ரஹீம் பாஷா, அப்துல் ரஜாக், முகம்மது பெரோஸ், குர்ஷித், எஸ்.விஜயகுமார், பிஎம்.சுரேஷ் பாபு, கார்த்திகேயன், எழிலன், ஆனந்தராஜ், அம்பேத்கர், அத்னான், பிரபாகரன், அலாவு தீன்,  அன்வர் இஸ்மாயில், கபீர் அஹ்மத், ஆர்.ராஜன் உள்பட பல்வேறு மாணவர் அமைப்பினர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் கவி.கணேசன், யாழ் திலீபன், கஸாலி,  விஜயக்குமார் ஆகியோர் நீட் எதிர்ப்பு முழக்கமிட்டனர்.

 

மதிமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், மாநில உரிமை பறிப்பு எனும் தலைப்பிலும், முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநிலச் செயலாளர் அன்சாரி பாசிச நோக்கம் எனும் தலைப்பிலும், முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநிலத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் செஞ்சுடர் நீட் தேர்வின் சமூகநீதி மறுப்பு எனும் தலைப்பிலும், சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் பெரோஸ், கல்வி உரிமை மறுப்பு எனும் தலைப்பிலும், கேம்பஸ்  ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலத் தலைவர் முஸ்தபா, கல்வி முதலைகள் கொள்ளை எனும் தலைப்பிலும், மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் அசாருதீன் இந்துத்துவக் கல்வித் திணிப்பு எனும் தலைப் பிலும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி ஒருங்கிணைப்பாளர் சிறீநாத் நுழைவுத் தேர்வே அவசிய மற்றது எனும் தலைப்பிலும், அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் சார்பில் கா.அமுதரசன் உயர் ஜாதி, நகர்ப்புற பணக்காரர்களுக்கானது எனும் தலைப்பிலும், சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாநில பொருளாளர் அன்சாரி உள்பட பலர் நீட் திணிப்பை எதிர்த்தும், கல்வி உரிமைகளை வலியுறுத்தியும், கல்விணை மாநிலப்பட்டியலுக்கு திரும்பக் கொண்டுவர வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்ட முடிவில் திமுக மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.மோகன் நன்றி கூறினார்.

 

அனைத்து மாணவர் அமைப்புகளின் சார்பிலும் கொடிகள் ஆர்ப்பாட்டத்தின் எழுச்சியை பறைசாற்றின. திராவிடர் மாணவர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மதிமுக மாணவர் அணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, முற்போக்கு மாணவர் கழகம், சமூகநீதி மாணவர் இயக்கம், கேம்பஸ்  ஃப்ரண்ட் ஆப் இந்தியா,    மாணவர் இந்தியா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி, அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவரணியினர் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உணர்ச்சிமிகு முழக்கங்களை எழுப்பினார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

நீட் தேர்வு; விதிகளில் திருத்தம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

NEET Exam; Amendment of Rules

 

பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுக்காத மாணவ மாணவிகளும் இனி மருத்துவர் ஆகலாம் எனத் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

 

பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த தேர்வுக்கு தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய கல்வி முறையில் உயிரியல் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள்தான் மருத்துவ படிப்பை படிக்க முடியும் என்ற விதி இருந்தது. இந்த நிலையில், இந்த விதியை மாற்றும் விதமாக இனிமேல், உயிரியல் பாடப்பிரிவை எடுக்காத மாணவர்கள் கூட மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வை எழுதலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. 

 

இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைப் படிக்காமல் வேறு பாடங்களைப் படித்தவர்கள் மேல்நிலைப்பள்ளி கல்வியை முடித்த பின்னர் அவர்கள் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு எழுதும் தகுதி பெற்றவர்கள் ஆவர். அதாவது, உயிரியல் பாடத்தை தேர்வு செய்யாத மாணவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவம் அல்லது பிடிஎஸ் (பல் சார்ந்த படிப்பு) படிப்பில் சேர முடியும். இந்த மாணவர்கள் தங்களது பாடங்களைச் சேர்த்து கூடுதல் பாடமாக உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறது. 

 

மேலும், இந்த அறிவிப்பிற்கு முன்னர் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கும் இந்த புதிய விதி செல்லத்தக்கது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த அறிவிப்புகள் அனைத்தும் பள்ளிக் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் அறிவிப்புகளாக இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.