Skip to main content

எனது 8 ஆண்டு வலியுறுத்தலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்- ஸ்டாலின் பேச்சு...

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

 

stalin speech in kolathur

 

 

அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "என்னுடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை இன்று பல இடங்களுக்கு நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகின்ற காரணத்தால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டுமுதல் கேள்வி நேரத்திலும், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போதும், அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றேன். அப்போதெல்லாம் பதிலளித்த, மின்துறை அமைச்சர் அவர்கள், பல விளக்கங்களைத் தந்திருக்கிறார். குறிப்பாக, 2,657 கோடி ரூபாய் மத்திய அரசின் மூலமாக இந்தத் திட்டத்திற்கு, மின் கம்பிகள் அனைத்தையும் HT மற்றும் LT, புதைவடக் கம்பிகளாக மாற்ற இருக்கிறோம் என்று உறுதி சொல்லப்பட்டது. தொடர்ந்து 7 முறை சட்டமன்றத்தில் இதுகுறித்து நினைவுபடுத்திப் பேசியிருக்கிறேன். அதன்விளைவாக, சில பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், அந்தப் பணிகள் போகின்ற போக்கைப் பார்த்தால், 2021 மார்ச் மாதம்தான் முடிவடையும் என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே, உயிர்ப்பலி ஏற்படுவதைத் தடுக்க, உடனடியாகவும், விரைவாகவும் இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமூச்சோடு ஈடுபட்டு முடித்துத்தர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல கணேஷ் நகர் பகுதியில் சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் கேட்டு, நான் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறேன். எனவே, அந்தப் பணிகள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து, கொளத்தூர் - வில்லிவாக்கம் தொகுதிகளை இணைக்கும் LC1 பணிகளை ரயில்வே துறை முடித்திருக்கும் நிலையில், மாநகராட்சி விரைந்து அந்தப் பணிகளை முடித்து, 8 ஆண்டுகளாக நான் கொடுத்துவரும் வலியுறுத்தல்களுக்கு இந்த அரசு விரைவில் செவி சாய்த்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.