Skip to main content

"தலைமை ஆசிரியர் போல் சபாநாயகர் நடந்து கொண்டார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு! 

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

"The Speaker acted like the Editor-in-Chief" - Praise from Chief Minister MK Stalin!

 

தமிழக சட்டப்பேரவையில் இன்று (10/05/2022) பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "22 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது. ஜனநாயக நெறிமுறையின் படியும், மக்களாட்சியின் மாண்பு காப்பாற்றப்பட்டு அவை நடத்தப்பட்டுள்ளது. பேரவையில் மோதிக்கொண்டோம் சொற்களால்; வாதிட்டுக் கொண்டோம் வார்த்தைகளால். ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியினருக்கு பேச அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. அவைத் தலைவராக மட்டுமின்றி தலைமை ஆசிரியர் போல் சபாநாயகர் நடந்து கொண்டார். தேர்தலுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது மக்கள் ஆதரவை அதிகம் பெற்ற அரசாக இருக்கிறது" எனத் தெரிவித்தார். 

 

முன்னதாக, காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் தந்து 78 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்