Skip to main content

பொது இடங்களில் பாலியல் அத்துமீறல்! -கம்பி எண்ணும்  ‘சபலிஸ்ட்’ ஜெயபிரகாஷ்!

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
bike

 

பொது இடங்களில் பாலியல் ரீதியான அத்துமீறலைச் செய்யும் ஆண்கள் குறித்து வெளியில் சொல்வதற்குத் தயங்குவார்கள் பெண்கள். இந்தத் தயக்கமே, ஆண் சபலிஸ்ட்டுகளுக்குத் துணிச்சலைத் தருகிறது. அப்படி ஒரு விவாகரமான ஆள்தான் சென்னை காக்கிகளிடம் பிடிபட்டிருக்கிறான். 


‘ஒரு மாதிரியான ஆளு’ என்று காவல்துறை, அவனை அடையாளம் கண்டது எப்படி? 
‘அந்தப் பொறுக்கி  என்கிட்ட நடந்ததை எப்படி என் வாயால சொல்ல முடியும்?’ என்கிற ரீதியில் சென்னை – கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் 4 பெண்கள் வெவ்வேறு நாட்களில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில்,  டூ வீலர் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டி,  வாகன எண்ணை மறைத்திருந்த ஆசாமி ஒருவன், வாகன சோதனையின்போது பிடிபட்டிருக்கிறான்.  ‘இது சரியில்லியே’ என்று காக்கிகள் தங்கள் பாணியில் அவனை விசாரித்தபோது, “என் பெயர் ஜெயபிரகாஷ். என் பொழுதுபோக்கே இதுதான்” என்று, தான் செய்த அட்டூழியங்கள் குறித்து வாக்குமூலம் தந்திருக்கிறான். 

 

appaavi

 

சென்னை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் பிரிவில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கும் ஜெயபிரகாஷ்,  
“லேடீஸ் விஷயத்துல நான் வீக்.  பஸ்ஸுல கூட்ட நெரிசல்ன்னா ரொம்ப வசதியா போயிரும்.  கோயில் திருவிழா எங்கே நடந்தாலும் போயிருவேன். பைக்ல போய்க்கிட்டே இருப்பேன். ரோட்டுல தனியா  நடந்து போற பெண்களைப் பார்த்தால்.. பைக்கை நிப்பாட்டி..  அட்ரஸ் கேட்கிற மாதிரி, பேச்சு கொடுப்பேன். அப்ப அந்தப்  பெண்ணோட முகத்தை ரொம்பவும் க்ளோஸ்-அப்ல பார்க்கிறப்ப, எனக்கு ஒரு மாதிரி ஆயிரும். கூச்சப்படாம கையை வைச்சிருவேன். இல்லைன்னா.. பைக்ல இருந்து இறங்கி கட்டிப்பிடிச்சிருவேன். அவங்க கத்துனதும், பைக்கை கிளப்பிருவேன். அப்ப யாரும் பைக் நம்பரை நோட் பண்ணிடக் கூடாதுன்னுதான் நம்பர் பிளேட்டை ஸ்டிக்கர் வச்சு மறைச்சிருக்கேன். நெறய பெண்கள்கிட்ட இந்த மாதிரி நடந்திருக்கேன். பெண்களின் அங்கங்கள் என்றால் எனக்கு அப்படி ஒரு ஆர்வம். ரொம்ப காலமா நான் இப்படித்தான் இருக்கேன். நான் பண்ணுறது தப்புன்னே எனக்குத் தோணல.” என்று கூறி,  தன்னை மன்னித்து விட்டுவிடும்படி கெஞ்சியிருக்கிறான். 


“உன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாங்க?  நீ பண்ணுனது எல்லாமே மன்னிக்க முடியாத குற்றம். எங்ககிட்டயே அப்பாவி மாதிரி நடிக்கிறியா?” என்று அவனை போலீஸ் ஸ்டைலில் கவனித்துவிட்டு, சிறையில் அடைத்திருக்கிறார்கள்.  


பத்து மாதங்கள் தன்னைச் சுமந்து பெற்றதும் ஒரு பெண்தான் என்பதை ஜெயபிரகாஷ் போன்ற சபலிஸ்ட்டுகள் மறந்தது ஏனோ?

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 Sexual harassment of a child girl in uttar pradesh

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்துக் கொள்வதற்காக ஓடிய சிறுமியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்து தொழில்முறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அந்த சிறுமி தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். 

 

அப்போது விஜய் மெளரியா என்ற நபர், அந்தச் சிறுமியைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமியை இடைமறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது அங்கிருந்து தப்பி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஓடிச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியைப் பின் தொடர்ந்த விஜய் மெளரியா, ரயிலில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழியாக வந்த ரயில், சிறுமி மீது மோதியுள்ளது. இதில், அந்த சிறுமியின் ஒரு கையும், இரு கால்களும் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார். 

 

உடனே அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விஜய் மெளரியா மீது போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

கத்தி முனையில் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் - இருவர் கைது

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

tamil actress jewels theft issue case

 

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் துணை நடிகை ஒருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் இருவர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அத்துடன் அந்த நடிகையின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையையும் பறித்து சென்றுள்ளனர். மேலும் அவரை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நடிகை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரான  ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டாவது நபர் அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது.

 

இதனை தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் துணை நடிகையின் வீட்டிற்கு சென்று பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்ததுடன் கத்தியை காட்டி அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் பின்பு இருவரையும் கைது செய்த காவல்துறையினர்  அவர்கள் மீது ஐ.பி.சி. சட்ட பிரிவு 376 மற்றும் 397 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். இதையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட  நகை மற்றும் பணம் மீட்கப்பட்டு துணை நடிகையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.