Skip to main content

சுஷாந்த் மரணம் குறித்து விசாரிக்கும் அதே குழு தமிழகம் வரும்! -சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.ஐ தகவல்!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

sathankulama incident cbi

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீஸாரால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடந்து வரும் இது சம்பந்தமான வழக்கில்  சி.பி.ஐ இன்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய தடயவியல் குழு தற்போது நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் நிலையில், அக்டோபரில் சாத்தான்குளம் வழக்கை அதே தடயவியல் குழு ஆய்வு செய்ய இருப்பதாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சித்திரவதை கொலைகள் தொடர்பாக சி.பி.ஐ, சி.பி.சி.ஐ.டி தரப்பில் நிலை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்