Skip to main content

சன் பார்மா நிறுவனத்திற்கு ரூபாய் 10 கோடி அபராதம்! 

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

 

Rs 10 crore fine for Sun Pharma!

 

வேடந்தாங்கல் அருகே சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மருந்து ஆலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்ட சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையொட்டி, இயங்கி வரும் சன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனம், ஆலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி மீனவர் நலச்சங்கத்தின் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 1994- ஆம் ஆண்டு முதல் 2006- ஆம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது சட்டவிரோதம் எனக் கூறி சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்