புளூவேல்: மேலும் ஒரு மாணவர் புதுச்சேரியில் தற்கொலை
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் புளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த புதன்கிழமை மதுரையில் ஒரு பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி பல்கலையில் பயிலும் முதலாமாண்டு எம்.பி.ஏ., மாணவர் சசிகுமார், இந்த விளையாட்டுக்கு அடுத்த பலியாகினார். அசாமை சேர்ந்த மாணவரான சசிகுமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சசிகுமாரின் மொபைலில் இருந்து புளூவேல் தொடர்பான லிங்குகள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுந்தரபாண்டியன்