Skip to main content

வேட்டி சட்டையில் பிரதமர்... தொடங்கியது 'செஸ் ஒலிம்பியாட்'

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

 Prime Minister's visit... started 'Chess Olympiad'

 

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. தற்பொழுது ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

 

 Prime Minister's visit... started 'Chess Olympiad'

 

இவ்விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக போட்டியிடும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தற்பொழுது விழாவானது நாட்டுப் பண் உடன் தொடங்கியது.

 

சார்ந்த செய்திகள்