Skip to main content

'அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்'-பவதாரிணி மறைவுக்கு முதல்வர் இரங்கல்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
'The place he leaves will remain the same'- Chief Minister condoles the death of Bhavadharini

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) இலங்கையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி.

தொடர்ந்து பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் மூலம் பிரபலமானவர். அந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். அதனைத் தொடர்ந்து தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் அப்பா இளையராஜா ஆகியோர் இசையில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தனித்துவமான குரலில் பாடி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர். இது சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் வந்த ஹிட் பாடல்களாகும்.

பாடல்கள் மட்டுமல்லாது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் உள்ளார் பவதாரிணி. இலங்கை சென்றிருந்தவர் அங்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துயர சம்பவம் தமிழ் திரையுலத்தினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறையினர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

'The place he leaves will remain the same'- Chief Minister condoles the death of Bhavadharini

பாடகி பவதாரிணியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'பிரபல பின்னணி பாடகியும் இளையராஜாவின் அன்பு மகளுமான பவதாரிணி மறைவு வேதனை அளிக்கிறது. தேனினும் இனிய தனது குரல் வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்கள் நெஞ்சில் தனி இடம் பிடித்தவர் பவதாரிணி. கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் கொண்டவர் பவதாரிணி. அவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருது பெற்றவர். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையில் எத்தனையோ சாதனைகளை செய்திருக்க வேண்டியவர். அவரது திடீர் மறைவு இசை உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து தவிக்கும் இளையராஜா மற்றும் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்