Skip to main content

ஓ.பி.எஸ் என்னை ஏமாற்றிவிட்டார்: ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 08/07/2018 | Edited on 08/07/2018


துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னை ஏமாற்றி என்னுடைய தொண்டர்களை அவர் பக்கம் இழுத்துக்கொண்டார் என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னை அரசியல் ரீதியாக ஏமாற்றிவிட்டு என்னிடம் இருந்த தொண்டர்களை அவரது பக்கம் இழுத்துக்கொண்டார். இதனால்தான் அவருடைய செல்வாக்கு உயர்ந்தது.

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடக்குமா? என்பதே சந்தேகம். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடித்தால் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். மத்தியிலும், மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்