Skip to main content

'சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர்'!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

NILGIRIS KUNNUR ELEPHANTS CAMP FUNCTION MINISTER CHILDREN

இந்நிலையில் யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்ற போது, அவரது செருப்பு மாட்டிக்கொண்டது. புல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை ஒரு சிறுவனை 'டேய் வாடா வாடா, செருப்பை கழற்றுடா' என கூறியதும் அருகிலிருந்த சிறுவன் அவரது செருப்பை அகற்றினான்'. சம்பவம் நடந்த போது அமைச்சருடன் அருகில் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அதிகாரிகள் உடனிருந்தனர். அமைச்சரின் இந்த செயலால் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்