Skip to main content

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

 

nutrino



தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த திட்டத்தை சிறப்பு திட்டமாக செயல்படுத்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தால் கதிர் வீச்சு அபாயம் இருக்காது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

நியூட்ரினோ ஆய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்! தேனியில் பரபரப்பு!!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் தொகுதியான போடி தொகுதியில் உள்ள பொட்டிபுரத்தில் இருக்கும் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  ஏற்கனவே திட்டம்  தீட்டி திட்டப் பணிகளையும் மேற்கொண்டபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துடன் மட்டுமல்லாமல் போராட்டத்திலும் குதித்தனர். அதோடு வைகோவும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் மூலம் நியூட்ரினோ ஆய்வகம் மூலம் வரும் பாதிப்புகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்.

approval to neutrino project in theni


அதோடு மட்டுமல்லாமல் நியூட்ரினோ திட்டம்  இப்பகுதியில் வரக்கூடாது என ஐகோர்ட்டு மூலம் இடைக்கால தடை உத்தரவும் வாங்கியிருக்கிறார். இந்நிலையில் மத்திய அரசு தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கபடும் என திட்டவட்டமாக கூறியதுடன் மட்டுமல்லாமல் மாநிலங்கள் அவையிலும் மத்திய  இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமாக பதிலளித்திருக்கிறார். அதோடு மத்திய அணுசக்தி துறையும் அந்த  நியூட்ரினோ ஆய்வகம் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருக்கிறது.

 

approval to neutrino project in theni


அதோடு இந்தியாவிலேயே முதன்முதலாக நியூட்ரினோ ஆய்வகம் தேனி மாவட்டத்தில்தான் அமைய இருக்கிறது என்று  மத்திய அரசு திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.  இப்படி திடீரென மீண்டும் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள மக்களை  பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன் மட்டும்மல்லாமல் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

Next Story

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை!- பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு!!

Published on 02/11/2018 | Edited on 02/11/2018

 

neutrino

 

தேனியில் நியூட்ரினோ திட்டம் செயற்படுத்த அனுமதிக்க கூடாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று அது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ ஆய்வகப்பணிகளுக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது