Skip to main content

கட்சிக்கு வளர்ச்சி நிதி வேண்டும்: ஈபிஎஸ் - ஓபிஎஸ் பெயரில் பணம் கேட்டு மிரட்டல் - 5 பேர் கைது!

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
real estate


தமிழக அரசியலில் சசிகலா கும்பல், மன்னார்குடி கும்பலுக்கு வேண்டப்பட்டவர்கள் மிரட்டி பணம் பறித்த காலம் போய் நாங்க ஓ.பி.எஸ்.குரூப், என்று ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களை மிரட்டும் காலமாக மாறி இருக்கிறது என்பதற்கு திருச்சியில் நடந்த இந்த சம்பவம் ஒரு உதாரணம்..

திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ் ரைட் சிட்டி என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் கிருஷண்மூர்த்தி இவரிடம் நாங்கள் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் தம்பி ராஜா பெயரை சொல்லி மிரட்டி பணம் பறித்தவர்களை திருச்சி போலிஸ் விரட்டி பிடித்து கைது செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது அவரோ, ரைட்சிட்டி என்கிற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறோம், லால்குடி பக்கம் பிளாட் போட்டு விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். இது இல்லாமல் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் வியாபாராம் செய்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த வாரம் பெரியகுளம் பகுதியில் ஒரு இடம் விற்பனைக்கு வந்தது நாங்கள் அந்த இடத்தை விசிட் பண்ணி பத்திரம் சரி பார்க்கிறோம் என்று சொல்லி ரூ.1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து பத்திரம் வாங்கிட்டு வந்தோம்.

அடுத்த இரண்டாவது நாளே பெரியகுளத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சியில் இருக்கிறேன் என்று சொல்லி, முகுந்தன் துணைசேர்மன் என்பவர், எங்க ஏரியாவுல ரியல்எஸ்டேட் பண்றீங்க, எங்களை மீறி எதுவும் பண்ண முடியாது. எங்களுக்கு பணம் கொடுத்தா தான் நீ வியாபரமே பண்ண முடியும் 1 கோடி ரூபாய் கொடு - கட்சி வளர்ச்சி நிதி வேணும், நீ யார்கிட்ட போனாலும் எதுவும் பண்ண முடியாது என்று என்று மிரட்ட ஆரம்பித்தார்கள். நானும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் என்னை மிரட்டி வந்தனர்.

இதனால் வேறு வழியில்லாமல் ரூ.10 லட்சம் தருவதாக சொன்னேன். உடனடியாக அதனை தரும்படி மிரட்டவும் என்னிடம் பணம் இல்லை. கையில் ரூ.1 லட்சம் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் அதை பறித்துக்கொண்டு அடுத்த வாரம் வருவதாக சொல்லிவிட்டு சென்றனர்.
 

car


ஆனால் அடுத்த நாளே, என் அலுவலகத்துக்கு TN59 BT 8344 என்ற எண் கொண்ட காரில்  திண்டுக்கல் செல்வநாயகம், மதுரை செல்வம், பெரியகுளம் பிரேம், முருகேசன் உள்ளிட்ட 7 பேர் வந்து மீதி 9 லட்சம் பணம் கொடு இல்லை என்றால் கடத்திவிட்டு சென்றுவிடுவோம் என மிரட்டவும் நான் வேறு வழியில்லாமல் தில்லைநகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு என் நண்பர்கள் மூலம் தகவல் சொன்னேன். அவர் ஒரு டீம்மோட வந்து மொத்த கும்பலையும் விரட்டி பிடித்ததார். இதில் இரண்டு பேர் மட்டும் தப்பினார்கள்.

போலீசாரின் விசாரணையில், ஓ.பி.எஸ். பெயரை சொல்லி மிரட்டி பணம் பிடுங்குகிறார்கள் என்றதும் பயந்து போய் உதவி கமிஷனர் பெரியய்யாவுக்கு தகவல் சொல்ல அவரும் விசாரணையை தீவிர படுத்தினார்கள்.

கடைசியாக கமிஷனர் அமல்ராஜீக்கு விஷயம் சென்றவுடன், அவர் நேரடியாக துணை முதல்வர் ஓ.பி.எஸ், மற்றும் அவர் தம்பி ராஜாவிடம் இது பற்றி தகவல் சொல்ல.. அவர்கள் இரண்டு பேரும் அந்த குரூப் யார் என்றே தெரியவில்லை அவர்களை உடனே கைது பண்ணி சிறையில் அடையுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். தில்லைநகர் போலிஸ் இது பற்றி வெளியே பத்திரிகைகளுக்கு யாருக்கும் தகவல் சொல்லாமல் இரவு வரை காத்திருந்து 7 பேர் மீது வழக்கு பதிந்து 5 பேரை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இது குறித்து நாம் தில்லைநகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் கேட்ட போது… அவங்க அ.தி.மு.க. ஆட்களே கிடையாது. துணைமுதல்வர், பெயரை சொல்லி மிரட்டவில்லை, அவுங்க ஏரியாவுல தொழில் தொடங்க வந்திருப்பதால், எனக்கு பணம் கொடுங்கன்னு மிரட்டினதா புகார் வந்தது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து இருக்கிறோம் அவ்வளவு தான் என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.