Skip to main content

அம்மா இருசக்கர வாகனம்;மாற்று திறனாளிகளுக்கு 75 விழுக்காடு  மானியம் வழங்க கோரி வழக்கு

Published on 20/02/2018 | Edited on 20/02/2018
ammaa schooty

 

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு 75 விழுக்காடு  மானியம் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

தமிழக அரசின் அம்மா  இரு சக்கர வாகனத் திட்டம் தொடர்பான அறிவிப்பாணை  கடந்த மாதம்   வெளியிடப்பட்டது.  இத்திட்டத்தின் கீழ் வேலைக்கு  செல்லும் பெண்கள்  இருசக்கர வாகனங்கள் வாங்க 50 விழுக்காடு  மானியம் அல்லது 25 ஆயிரம்  இவற்றில் எது குறைவோ, அத்தொகையை அரசு மானியமாக வழங்குகிறது.

 

இந்த திட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு கூடுதலாக 25 விழுக்காடு மானியம்  வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்  பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சங்கத்தின்  தலைவர் நம்புராஜன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

 

அந்த மனுவில் "சமூக நலத் திட்டங்கள்  மற்றவர்களுக்கு வழங்கும் மானியத்தை விட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25 விழுக்காடு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்  2016 கூறுவதாகவும், எனவே சட்டத்தின் படி 25 விழுக்காடு மானியம் அதிகம் வழங்க வேண்டும் என்றும்,  இது தொடர்பாக கடந்த ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 5 ஆம் தேதிகளில்  அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். 

 

இது தவிர அரசு திட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 4 ஆயிரம்  மாற்று திறனாளிகள் பயன்பெறும் நிலையில் அவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்  வழங்க வேண்டும் " எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு நாளை  விசாரணைக்கு  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையை கடந்தவர் மீது கார் மோதல்: விபத்து ஏற்படுத்திய நடிகையிடம் செல்பி எடுத்த மக்கள்!

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 


நடிகை ராஷ்மி கவுதம்  விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவு காரில் கன்சுவாகா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றபோது,அங்கம்புடி தேசிய நெடுஞ்சாலையில்  சாலையை கடக்க முயன்ற சையத் அப்துல் மீது ராஷ்மி கவுதத்தின் கார் மோதியது. உடனே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

r

 

விபத்து நடந்தபோது அந்த பகுதியில் சிலர் கூடி நடிகை ராஷ்மி கவுதத்துடன் செல்பி எடுத்தனர்.   இது மோசமான செயல். வருத்தமாக இருக்கிறது என்று நடிகையே மனம் நொந்துசென்றார்.

 

இந்த சம்பவத்திற்கு பின்னர், ராஷ்மி கவுதம் வேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.   சாலையில் விளக்கு இல்லாததும், சையத் அப்துல் வேகமாக ஓடி வந்து சாலையை கடந்ததாலும்தான் விபத்து ஏற்பட்டது என்றும், தான் காரை ஓட்டவில்லை என்றும், டிரைவர்தான் ஓட்டி வந்தார் என்றும்,  அந்த கார் எனக்கு சொந்தமானதே இல்லை என்றும் ராஷ்மி கவுதம் கூறியதை அடுத்து போலீசார் டிரைவரை கைது செய்துள்ளனர்.