திருவண்ணாமலை அருகே அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் திருடுபோயுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில், மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் புதியதாகக் கூட்டுறவு வங்கிக் கிளை நேற்று திறக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வங்கியின் புதிய கிளையை திறந்துவைத்தார்.
பின்னர் விழா முடிந்ததும் விருந்தினர் மாளிகைக்கு சென்றிருந்த போது அங்கிருந்து அவருடைய செல்போன் திருடு போனது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விசாரணை நடத்தி வருகிறார். முக்கிய எண்கள் அடங்கிய செல்போன் திருடு போனதால் அமைச்சர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் திருட்டு!
சார்ந்த செய்திகள்
Next Story
'இவரது தலைமையிலேயே அதிமுக களம் காணும்'- அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!!
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்ததிலிருந்து அதிமுகவில் பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தலுக்குப்பின் முதல்வர் எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறியிருந்த நிலையில்,
'இலக்கை நிர்ணயித்து விட்டு களத்தை சந்திப்போம், எடப்பாடியாரை முன்னிறுத்தி களம் அமைப்போம், களம் காண்போம், வெற்றி கொள்வோம் 2021 நமதே' என குறிப்பிட்டு அதிமுக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ட்விட்டர் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரையில் பேட்டியளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் வழிகாட்டுதல்படியும் அதிமுக செயல்படும். ஒற்றுமையுடன் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். முதல்வரை முன்னிறுத்தி தான் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Next Story
"இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?" -அமைச்சர்களைத் திணறடித்த பெண்!
கூட்டுறவுத் துறை சார்பில் விருதுநகரில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய தொடக்க விழா நடைபெற்றது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் பங்கேற்ற இவ்விழா மேடையில், கூட்டுறவு வங்கிக் கடன் பெறுவதற்காக வந்த பாத்திமா என்பவர், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது குறித்து அமைச்சர்களின் முகத்துக்கு நேராகவே கேள்வி எழுப்பினார்.
"நீங்க ஓட்டு போடாம இருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா? அதை யோசிங்க மொதல்ல.." என்று கேட்க, செல்லூர் ராஜு அவரிடம், "நான் சொல்றத கேளுமா.. மூணு விதிவிலக்கு.. அந்த விதிவிலக்கை.." என்று கூற, பாத்திமாவோ, "இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?" என்று தொடந்து வாதம் செய்ய, "அதெல்லாம் ஒன்னும் இல்லமா.. நீங்க கவலையே படாதீங்க.." என்று சமாளித்தார்.
"அமைதியா இருங்க... எடப்பாடியார் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.." என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி சொன்னதையெல்லாம், பாத்திமா காதில் வாங்கவே இல்லை.
பொது நிகழ்ச்சிகளில் இது போன்ற கேள்விகளைக் கேட்டு யாரும் தங்களைத் திணறடித்துவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்தாலும், இதுபோல் நடந்து, ஆட்சியாளர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிவிடுகிறது.