Skip to main content

இடி தாக்கியதில் ஆண்,பெண் இருவர் பரிதாப பலி!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Male and female passed away in thunderstorm attacks

 

திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாகக் கடந்த இரண்டு மணி நேரமாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் திருவெறும்பூர் பகுதியை அடுத்துள்ள பத்தாளப்பேட்டை என்ற இடத்தில் பெய்து வரும் கன மழையில் பலத்த சத்தத்துடன் இடி இடித்தது.

 

இந்த நிலையில் பத்தாளப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதோடு உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்