Skip to main content

கருணாஸ் கைது! எச்.ராஜா மற்றும் எஸ்.வி சேகர் ?-தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி அறிக்கை!

Published on 23/09/2018 | Edited on 24/09/2018

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயவாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆகியோர் கருணாஸ் கைது குறித்து  வெளியிடும் கூட்டு  அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

முக்குலத்தோர் புலிப் படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ அவர்கள் , தன் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சைக்குரிய தாகி, அவரை கைதில் கொண்டு போய் நிறுத்தியிருக்கறது.

 

Karunasu arrested H. Raja and SV Shekhar? - Tamils and Tamils Ansari Report!

 

அவரது பேச்சின் சில பகுதிகள் எந்த விதத்திலும் ஏற்க முடியாதவை. அதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். வேதனையடைந்தோம்.

 

நாங்கள்  கருணாஸ் அவர்களை   அலைப்பேசியில்  தொடர்புக் கொண்டு, அவரது வார்த்தை பிரயோகங்களையும், அதனால் உருவாகியுள்ள சர்ச்சைகளையும் எடுத்துக் கூறி இது நியாயம் தானா? உங்கள் கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி பேசிவிட்டு வந்திருக்கலாமே? அது தானே அரசியல் தர்மம் ? என்றெல்லாம் சுட்டிக்காட்டி, இதற்கு வருத்தம் தெரிவிக்க சொன்னோம்.

 

அவர் அதை புரிந்து  ஏற்றுக் கொண்டார். இரண்டு முறை வருத்தங்களையும் ஊடகங்களின் வழியாக தெரிவித்துக் கொண்டார் இன்று அவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் காவல்துறை கைது செய்துள்ளது.இதை நாங்கள் ஒரு சட்ட நடவடிக்கையாக  பார்க்கிறோம். புரிந்துக் கொள்கிறோம்.

 

தமிழகத்தில் சமூக நல்லிணக்கம், பொது அமைதி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். யாரும், யாரையும் காயப்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

 

அதே சமயம் தமிழக மக்களின் பெரும் மதிப்பை பெற்ற தந்தை பெரியாரின் சிலையை உடைப்போம் என்று கூறியவரும், சமீபத்தில்  நீதிமன்றத்தையும் , காவல்துறையையும் கொச்சைப்படுத்தி, கேவலமாக பேசிய H. ராஜா அவர்கள் மீதும், பெண் பத்திரிக்கையாளர்களை  பற்றி படு அசிங்கமாக கருத்து பதிவிட்ட S.V.சேகர் மீதும் இதே போன்ற நடவடிக்கையை எடுத்திருந்திருக்க வேண்டும்.

 

நேற்று கூட அண்ணன் சரத்குமார் போன்றவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டுமென்று தானே பேட்டியளித்தார்கள்.இதே கேள்வியை தமிழகத்தில் பலரும் கேட்கிறார்கள். எனவே அவ்விருவர் மீதும் இப்போதாவது தமிழக அரசு உறுதியான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

 

 தமிழக அரசு  சமூக நல்லிணக்கத்தை காக்கவும்,அமைதியை நிலைநாட்டவும் பாராபட்சமின்றி செயல்பட வேண்டும் என   கேட்டுக் கொள்கிறோம். தமிழக மக்கள் அனைவரும் பொது நல்லிணக்கமும், அமைதியும் வலிமைப் பெற ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.