Skip to main content

பொய்வழக்குகள் பதிந்ததால் அப்படி பேசிவிட்டேன்;ஆவேச பேச்சுக்கு கருணாஸ் வருத்தம்!!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

 

karunas

 

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசிய கருணாஸ் தான் பேசியது யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன் என அறிவித்துள்ளர். 

 

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசிய கருணாஸ் சரமாரியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார். தன் தொண்டர்கள் கொலை செய்தாலும் தான் பார்த்துக்கொள்வேன் என்றும், அவர்களுக்கு செலவு செய்து வெளியில் கொண்டுவருவேன். நான் அடிப்பேன் என்று முதல்வேரே பயப்படுகிறார் வேண்டுமென்றால் அவரிடமே கேட்டு பாருங்கள் என்றும் பல சர்ச்சைக்குரிய ஆவேச பேச்சை வெளிப்படுத்தினார். அதேபோல் காவல்துறை அதிகாரிகளுக்கே மிரட்டங்கள் விடும் வகையில் அவர் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து  தற்போது  தங்கள் மீது தேவையற்ற வழக்குகள் பதிந்ததால் ஆவேசத்தில் அப்படி பேசிவிட்டேன். தான் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கிலும் காயப்படுத்தும் வகையிலும் பேசியிருந்தால் வருந்துகிறேன். நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் அல்ல எனவும் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்