Skip to main content

'நம்பும் தெய்வங்களை வணங்கி கொண்டிருக்கிறார்கள்' -எஸ்.பி.பி உடல்நிலை குறித்து கமல்ஹாசன் பேட்டி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

KAMALHASAN PRESSMEET

 

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. அதன் பிறகு தொடர் சிகிச்சையின் மூலம், அவரது உடல்நிலை முன்னேறிய நிலையில், தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும். கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிர்காக்கும் உபகரணங்கள் மூலம்  தீவிர  சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தகவலறிந்து நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வருகை தந்தார். எஸ்.பி.பியின் குடும்ப உறுப்பினர்களுடன் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் வெளியே வந்த அவரிடம், எஸ்.பி.பியின் உடல் நலம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்பொழுது ''உயிர்காக்கும் கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களெல்லாம் (அவரது குடும்பத்தினர்) அவர் நம்பும் தெய்வங்களை வணங்கி கொண்டிருக்கிறார்கள். நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவருடைய உடல்நிலை க்ரிட்டிக்கள் ஸ்டேஜில்தான் இருக்கிறது'' என்றார்.

பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் பெற திரைத்துறையினர் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்