Skip to main content

ஜெ. மரண விசாரணை: சசிகலா உதவியாளர் ஆஜரானார்

Published on 15/02/2018 | Edited on 15/02/2018
Sasikala

ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையம் அனுப்பும் சம்மன் அடிப்படையில் இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் இன்று ஆஜரானார்.

படம்: அசோக்குமார்


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சம்பவ இடத்தில் கிடந்த ‘0’ பாசிட்டிவ் ரத்தம்..’ - கொலை குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை!  

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Madurai Court confirmed life sentence

 

திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் சேட்டு(எ) இருதயராஜ், டிங்கி (எ) ஆரோக்கியராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோர் ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த 2004ம் ஆண்டு திருச்சி நீதிமன்றத்திற்கு காரில் சென்றனர். அப்போது மணிகண்டம் அருகே மற்றொரு ரவுடி கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ராம்ஜிநகர் போலீசார் பிரபல ரவுடிகளான முட்டை ரவி, குணா(எ) குணசீலன், ஆனந்த் (எ) முனிஆனந்த், ஆசாரி(எ)ஏசுதாஸ், மாதவன், சுந்தரபாண்டி, தட்சிணாமூர்த்தி, முருகன்(எ)துரைமுருகன், ஜெயக்குமார், மனோகரன், ரவி(எ)குட்ஷெட் ரவி, கமல்(எ)தண்டாயுதபாணி ஆகிய 12 பேரை கைது செய்தனர். 

 

இந்த வழக்கின் விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இடைப்பட்ட காலத்தில், பிரபல முட்டை ரவி என்கவுன்டர் செய்யப்பட்டார். முனிஆனந்த், ஜெயக்குமார் ஆகியோர் இறந்தனர். இவ்வழக்கில் கடந்த 2019ல் தீர்ப்பளித்த நீதிமன்றம், குணா, சுந்தரபாண்டி, முருகன், மனோகரன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. மற்றவர்களை விடுவித்தது.

 

தண்டனையை எதிர்த்து 4 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். இந்த மேல் முறையீடு மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், கொடூரமான முறையில் சைக்கோவைப் போல கொலை செய்துள்ளனர். இவர்கள் தரப்பினர் பெரிய அளவில் ரவுடியிசம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதை மற்ற சாதாரண கொலையைப் போல பார்க்க கூடாது. சம்பவ இடத்தில் சிந்திக் கிடந்த ‘0’ பாசிட்டிவ் ரத்தமும் உறுதி செய்யப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. 

 

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஆயுள் தண்டனை வழங்கியது சரிதான் என்பதால், அந்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

 

 

Next Story

மருத்துவர் உடலை கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
 Petition for physician's body to be buried in cemetery dismissed

 

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


கரோனா வைரஸ் பாதித்து பலியான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கீழ்பாக்கம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், அவரது உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி சத்தியநாராயணன் செல்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, மருத்துவரின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக்கோரி, அவரது மனைவி அளித்த கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேசமயம், அரசின் உத்தரவை எதிர்த்து மருத்துவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.