Skip to main content

ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்பா? கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!!

Published on 16/06/2019 | Edited on 16/06/2019

மதுரையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

 

சமூகவலைதளங்களில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு என்ற தகவலின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

 

madurai

 

இந்த நிலையில் கோவை சோதனையைத் தொடர்ந்து மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கோவை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உட்பட 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் 7 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டனர். இதில் அசாருதீன் என்பவரை கைது செய்தனர்.  

 

தற்போது மதுரையில் வில்லாபுரம் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் என்ஐஏ  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக  தகவல்கள்  வந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்