மழை, வெள்ளம், காட்டுத்தீ என, ஆபத்துக்கள் பல குறுக்கிட்டாலும், உயிரிழப்புக்களே ஏற்பட்டாலும், பக்தி செலுத்துவதை ஒத்திவைக்க மாட்டார்கள் மக்கள். இன்று சதுரகிரி மலையிலும் அதுதான் நடந்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எதிர்பாராதவிதமாக, இன்று தீடீரென்று மழை பெய்தது. மழை பெய்துகொண்டிருக்கும்போது, மலை ஏறுவது மிகவும் ரிஸ்க் ஆனது என்பதால், பக்தர்களை இன்று அனுமதிக்கவில்லை. சித்தர்கள் வாழும் மலை என்ற நம்பிக்கை மேலோங்கியிருப்பதால், சுந்தரமகாலிங்கத்தை தரிசித்தே ஆகவேண்டும் என்பதில் பக்தர்கள் உறுதியாக இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகமோ, மக்களின் உயிர் விஷயத்தில் கோட்டைவிட்டு எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கறாராக செயல்பட்டது. ஒருகட்டத்தில், பொறுமையிழந்த பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனாலும், அனுமதி கிடைக்கவில்லை. அதனால், தரிசனம் கிடைக்கவில்லை என்ற மனச்சுமையுடன், தலைக்கு மேலாக கைகளை உயர்த்தி, சதுரகிரி மலையை நோக்கி கும்பிடு போட்டுவிட்டு, வீடுகளுக்குத் திரும்பினார்கள் பக்தர்கள்.
தரிசனம் கிடைக்காதா? - சதுரகிரி மலையில் தவிப்புடன் முற்றுகை போராட்டம்!
சார்ந்த செய்திகள்
Next Story
சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை நீடிப்பு; அடிவாரத்தில் குவியும் பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கான தடை தற்பொழுது வரை நீடிக்கிறது.
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல ஒரு பிரிவினர் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கின் உத்தரவு நகல் கிடைக்கப் பெறும் வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எச்சரிக்கையை மீறி யாரும் மேலே செல்லக்கூடாது என்பதற்காக சதுரகிரி அடிவாரம் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அதிகப்படியான பக்தர்களும் அடிவாரப் பகுதியில் காத்திருக்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு காரணத்திற்காகவும் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
மாசி பிரதோஷம்; சதுரகிரியில் மலையேறும் பக்தர்கள்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். மலைப்பகுதியில் உள்ள கோவில் என்பதால் ஓடைகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் பேரிடரை கருத்தில் கொண்டு மலைக்கு மேல் செல்ல தடை மற்றும் கட்டுப்பாடுகளை அவ்வப்போது விதிக்கும்.
இந்த நிலையில், மாசி மாத பிரதோஷத்தை ஒட்டி மலையில் உள்ள கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இருப்பினும் 12 மணி வரை மட்டுமே அனுமதி என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் வழிபாட்டை முடிப்பதற்காக அதிகப்படியான பக்தர்கள் மலையேறி வருகின்றனர். ஏழாம் தேதி வரை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.