Skip to main content

ஹெச்.ராஜா வை கைது செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முடிவு

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

கடந்த 15.05.2019 அன்று கொடைக்கானலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கீழக்கரை முஸ்லீம்களை தீவிரவாதி என சித்தரித்து பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு  தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கீழக்கரை கிளையின் சார்பில் மாவட்ட துணைச்செயலாளர் தினாஜ்கான் மற்றும் நிர்வாகிகள் கீழக்கரை காவல் நிலையத்தில் எஸ்.ஐ மாடசாமியிடம் புகார் அளித்துள்ளனர்.

 

k

 

அந்த புகாரில்,  கீழக்கரையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் அண்னன் தம்பிகளாகவும்,
மாமன், மச்சான்களாகவும்  ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதியில் ஹெச்.ராஜா வேண்டும் என்றே இந்து மக்களையும், இஸ்லாமிய மக்களை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத துவேசத்துடன் பேசி வருகிறார். இந்த பகுதியில் யாரும், யாருக்கும் அடிமையாக இல்லை.

 

k

 

கீழக்கரையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்துமக்களும் சென்று வருகிறார்கள்.   இஸ்லாமிய மக்களும் சென்று வருகிறார்கள். ஒரு பிரச்சனையும் வரவில்லை.  இன்று வரை இவர் வேண்டும் என்றே தொடர்ந்து மத துவேசத்துடன் பேசி வருகிறார். இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.  தவறும் பட்சத்தில் தலைமை ஒப்புதலுடன் தொடர்ந்து அவரை கைது செய்யும் வரை போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள்.
 

சார்ந்த செய்திகள்