Skip to main content

மன்னார்குடி வங்கிக்கொள்ளையில் 4 பேர் கைது

Published on 12/05/2018 | Edited on 12/05/2018

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த அசேசம் கிராமத்தில் பட்டப்பகலில் தமிழ்நாடு மெக்ண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் 6 லட்சம்  கொள்ளையடிக்கப்பட்டது. 3 லட்சம் மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.

  
இந்த வங்கி கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட மணப்பாறை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கு ஊழியர் மரியசெல்வம் கைது செய்யப்பட்டார்.

 

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில்  வங்கி ஊழியர் பாதமுத்து , முத்துகுமார், மீரான், சுடலைமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் 2.88 லட்சம் பணம், 2 கார்கள், ஒரு துப்பாக்கி மற்றும் ஒரு போலி துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.  

சார்ந்த செய்திகள்