Skip to main content

அதிமுக முன்னாள் எம்.பி. நீக்கப்பட்ட விவகாரம்; எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Former AIADMK MP deleted matter; Court orders action against Edappadi Palaniswami

 

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டையை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்திருந்த கருத்துகள் தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதி கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான முழு ஆவணங்களையும் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்