Skip to main content

'மோடி ஒவ்வொரு முறை வரும்போதும் அவரது தவறுகளே நினைவுக்கு வரும்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Every time Modi comes, he remembers his mistakes' - Chief Minister M.K.Stalin Kattam

தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடியை கிழித்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடியை கிழித்துள்ளது. உண்மையான ஊழல் கட்சி பாஜக தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது. மற்ற கட்சிகளை ஊழல் கட்சி என்று விமர்சித்துள்ள பாஜக தான் உண்மையான ஊழல் கட்சி. அமலாக்கதுறையின் சோதனைகளுக்கு ஆளான சில நாட்களில் ஏராளமான நிறுவனங்கள் தாராளமாக பாஜகவுக்கு நிதி உதவி வழங்கியுள்ளன.

அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நிறுவனங்களிடமிருந்து பல கோடி பறித்துள்ளதால் பாஜக கட்சிதான் ஊழல் கட்சி என மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தி திணிப்பின் போது இரட்டை மொழிக் கொள்கையில் உறுதியாக இருந்தது போல் சி.ஏ.ஏ வை அமல்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுக பற்றி பிரதமர் மோடி தவறான தகவல்களை பேசி வருகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்த திட்டங்கள் என்னென்ன என்று கேள்வி எழுப்பினால் பாஜகவினர் அதற்கு பதிலளிப்பதில்லை.

வதந்திகளை பரப்பி பாஜகவினர் கவனத்தை திசை திரும்புகின்றனர். ஒன்றிய அரசின் எந்த திட்டம் தமிழ்நாட்டில் முடக்கப்பட்டது என்று கேட்டால் பாஜகவினரிடம் பதில் இல்லை. பிரதமர் வீட்டு வசதி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவது பாஜகவினர் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் தெரியும். திமுகவில் வாரிசு அரசியல் என்று கூறி பிரச்சனைகளை பாஜகவினர் திசை திரும்புகின்றனர். பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள வாரிசுகள் இடம் பெற்றுள்ளது பற்றி பிரதமர் பதில் கூறுவாரா? பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கொடுத்ததற்கு பிரதமரின் பதில் என்ன?

தேர்தல் பத்திரம் மூலம் ஊழலையே பாஜக சட்டபூர்வமாக செய்துள்ளது. தேர்தல் பத்திர தில்லுமுல்லுகள் அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது. தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடி கிழித்துள்ளது. அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளதால் திமுக அமைச்சர்கள் மீது அரசியல் நோக்கோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை சட்டபூர்வமாக திமுக முறியடிக்கும்.

தமிழ்நாட்டுக்கு பாஜக செய்த சாதனைகள் எதுவும் கூற முடியாததால் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரதமர் புகழ்ந்துள்ளார். பாஜகவினர் போதை பொருள் பற்றி பேசும் நிலையில் குஜராத்தில் இருந்து தான் அதிக போதை பொருட்கள் வருகின்றன. மோடி ஆட்சியின் 10 ஆண்டு கால தோல்வியால் நாடு முழுவதும் மக்கள் விரக்தியில் உள்ளனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மக்களின் விரக்தி தேர்தலில் எதிரொலிக்கும். மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போதும் அவரது தவறுகளே மக்கள் நினைவுக்கு வரும். போதை பொருட்களை தடுக்கக்கோரி பழனிசாமி நடத்திய போராட்டம் அரசியல் நாடகம். அதிமுக ஆட்சியில் டிஜிபி மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.