Skip to main content

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 7,737 படுக்கைகள்! கலெக்டர் தகவல்

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
pudukkottai district  - Collector

 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகள் தயாராக உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறியுள்ளார்.

 

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறும் போது, 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ராணியார் மருத்துவமனை மற்றும் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகளுடன் கூடிய மையங்கள் ஏற்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டுப்பாட்டில் இயங்கும் ராணியார் மருத்துவமனையில் 1000 படுக்கைகளும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனையில் 200, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் 100, 12 அரசு தாலுகா மருத்துவமனைகளில்  123, 13 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 195 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 121 படுக்கைகளும் என 1739 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் தற்போதைய நிலவரப்படி ராணியார் மருத்துவமனை மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி மருத்துவமனைகளில் 608 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்ற 1,131 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் குடுமியான்மலை வேளாண் பல்கலைக்கழகத்தில் 150 படுக்கைகளும், புதுக்கோட்டை குடிசை மாற்று வாரியத்தில் 1000 படுக்கைகளும், புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 100 படுக்கைகளும் என 1250 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

 

எதிர்வரும் நாட்களை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள 212 சமுதாயக் கூடங்களில் 1319 படுக்கைகளும், 27 மாணவர்கள் விடுதிகளில் 434 படுக்கைகளும், 121 திருமண மண்டபங்களில் 2,995 படுக்கைகளும் என 4,748 படுக்கைகளும் அமைத்து சிகிச்சை அளித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்