Skip to main content

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு கரோனா...

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

Jawahirullah

 

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் வாக்குப்பதிவு நாள் ஒருபுறம் நெருங்கிவரும் நிலையில், மறுபுறம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகள் சார்ந்த பரப்புரை கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாததால், கரோனா அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், சில கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், திமுக கூட்டணியில் பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு தற்பொழுது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்