Skip to main content

சின்னதம்பி யானையை வனப் பகுதியில் விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

chinna thambi elephant


 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யாணையானது 7 நாட்களாக இருந்த இடத்தை விட்டு தற்போது கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் அருகே வந்துள்ளது.

 இரவு நேரத்தில் கரும்பு காடுகளில் சுற்றி வருவதால் கரும்பு விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கரும்பு காட்டிற்கு தண்ணீர் எடுக்க செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், எனவே உடனடியாக சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வலியுறுத்தி ஏராளமான கரும்பு விவசாயிகள் உடுமலை பழநி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதனால் உடுமலை பழநி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் காலை நேரம் என்பதால் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் பேருந்து மற்றும் வாகனங்களின் நின்றவாறு தவித்தனர்.


 

chinna thambi elephant

 

சார்ந்த செய்திகள்