Published on 01/04/2020 | Edited on 01/04/2020
சென்னையில் 144 தடை உத்தரவை ஏப்ரல் 15- ஆம் தேதி காலை 06.00 மணி வரை 144 தடை நீட்டித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும் 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்கள், அதிகாரிகளுக்குச் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய 'கபசுர' குடிநீரை வழங்கினார்.