Skip to main content

ராயபுரத்தில் 189 பேருக்கு கரோனா- சென்னை மாநகராட்சி!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

chennai corporation rayapuram coronavirus



தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 189 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திரு.வி.க. நகர்- 169, கோடம்பாக்கம்- 63, அண்ணா நகர்- 73, தண்டையார்பேட்டை- 77, தேனாம்பேட்டை- 85, பெருங்குடி- 9, அடையாறு- 19, திருவொற்றியூர்- 16, வளசரவாக்கம்- 30, ஆலந்தூர்- 9, சோழிங்கநல்லூர்- 2, மாதவரம்- 4, மணலி-1, அம்பத்தூர்- 20, மற்ற பகுதிகளுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 1 என மொத்தம் 767 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

 

chennai corporation rayapuram coronavirus


நேற்றைய தினம் மட்டும் தண்டையார்பேட்டையில்- 7, தேனாம்பேட்டையில்- 4, திருவொற்றியூர்- 1, ராயபுரத்தில்- 25, கோடம்பாக்கத்தில்- 3, திரு.வி.க.நகரில்- 41, அண்ணா நகரில்- 8, அம்பத்தூரில்- 1, வளசரவாக்கத்தில்- 4 பேர் என 94 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
 

http://onelink.to/nknapp


இதில் 215 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 15 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மற்ற 536 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்