Skip to main content

சிவகார்த்திகேயன் குறித்து மனம்திறந்த அருண் விஜய்!

Published on 05/06/2022 | Edited on 06/06/2022

 

ARUN VIJAY

 

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் 'யானை'. அண்மையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய் யானை திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

 

அதில் பேசிய அவர், ''எல்லோரையும் கவரக்கூடிய கதையாகத்தான் எடுத்திருக்கிறோம். இளைஞர்களுக்கான நிறைய விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எந்தெந்த விஷயங்களைப் பண்ண கூடாது என்பதையும் எடுத்துச் சொல்லி இருக்கிறோம். இது ஒரு எங்கேஜிங்கான ஃபேமிலி எண்டர்டெய்னர். இதில் ஆக்ஷன் இருக்கிறது, ஹரி சாரின் ஸ்பீடு இருக்கிறது. இது ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு அரசியலில் வரும் எண்ணம் கிடையாது. எனக்கு என்னுடைய தொழில், அதில் என்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்ற அந்த ஒரு விஷயம்தான் இருக்கிறது. அரசியல் ஆசைகள் யாருக்கும் இருக்கக் கூடாது என்று சொல்ல முடியாது. அது அவரவர்கள் விருப்பம்'' என்றார்.

 

அப்போது 'சமூக வலைத்தளங்களில் உங்களுடைய ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயனுடைய ரசிகர்களுக்கும் மோதல் இருப்பதாக தெரிகிறதே அதை எப்படி பார்க்கிறீர்கள்?' என செய்தியாளர் கேள்வி எழுப்ப, ''அது சில சில மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். இப்பொழுது எங்களுக்கும் அவருக்கும் எந்த ஒரு வேறுபாடும், மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கும் கிடையாது. நீங்களே பார்த்திருப்பீர்கள் தொடர்ந்து என்னுடைய படத்தின் டிரைலரை அவர்தான் வெளியிட்டுள்ளார். இதெல்லாம் ஒரு ஹெல்தியான விஷயம். நம்ம 25 வருடமாக இந்த பீல்டில் இருக்கிறோம். என்னுடைய டிராக் வேற அவருடைய டிராக் வேற. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இப்பொழுது அவர் இந்த நிலைமையில் இருப்பது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்