Skip to main content

ஆவின் தலைவராக ஓ.ராஜா செயல்பட தடை! நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

தேனி ஆவின் நிர்வாக குழு தலைவர் ஓ.ராஜா தலைவராக செயல்பட விதிக்கப்பட்டத் தடையை நீக்கக்கோரிய மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்துள்ளது.

 

aavin and o.raja issue

 

 

தேனி மாவட்டத்தில் உள்ள பழனி செட்டிபட்டி துவக்க பால் கூட்டுறவு சங்கத்தலைவர் அம்மாவாசை தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆவின் ஒன்றிய நிர்வாகத்தை மதுரை தேனி என தனியாக பிரித்து தமிழக அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 22ல் அரசாணை பிறப்பித்தது. அதில் தேனி ஆவினை நிர்வகிக்க தலைவராக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.-சின் தம்பி ஓ.ராஜாவும், துணைத்தலைவரகா செல்லமுத்துவும், 16 நிர்வாக குழு உறுப்பினர்கள் இடைக்கால நிர்வாக குழுவாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் செப்டம்பர் 2ல் பொறுப்பேற்றனர்.

இதுகுறித்து ஆவின் ஒன்றிய உறுப்பினர்களுக்கு அறிவிப்பு செய்யவில்லை. கூட்டுறவு சங்கங்களில் சட்டப்படி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாக குழுவை தேர்வு செய்ய வேண்டும் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. சட்டவிரோதமாக இடைக்கால நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். தேனி ஆவினில் தலைவர் ஓ.ராஜா மற்றும் நிர்வாக குழு செயல்பட தடைவிதிக்க வேண்டும் என அம்மாவாசை தனது மனுவில் கூறி இருந்தார். 

அதை தொடர்ந்து தான் கடந்த 2019 செப்டம்பர் 12ல் நீதிபதிகள் அமர்வு ஓ.ராஜா தலைமையிலான நிர்வாக குழு செயல்பட இடைக்கால தடை விதித்தது. தேனி பால் உற்பத்தி மற்றும் பால் வள மேம்பாட்டுத்துறை துணை பதிவாளர் அன்றாட பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தடையை விலக்க கோரி ஆவின் நிர்வாகம் மனு செய்தது. அதன் அடிப்படையில் நீதிபதிகள் துரைச்சாமி மற்றும் ரவீந்திரன் அமர்வு நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்