Skip to main content

தஞ்சாவூர் உள்ளிட்ட 21 மாவட்ட தென்னை விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரண நிதி வழங்க உத்தரவிட கோரி வழக்கு

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
coconut-tree

 

2016- 2017 ஆண்டுகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் அடிப்படையில் தஞ்சாவூர் உள்பட 21 மாவட்டங்களை சேர்ந்த தென்னை விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரண நிதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல்  உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை  ஒத்திவைத்து.


தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பழனிவேல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  " இந்தியால் தேங்காய் சாகுபடியில் உலகில் முதலிடத்தில் உள்ளது.இந்தியாவில் 1.9758 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டுக்கு சுமார் 18 முதல் 20 பில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. தேங்காய் சாகுபடி மற்றும் தேங்காய் தொழில்துறையால் 10 முதல் 15 மில்லியன் பேர் பயனடைந்து வருகின்றனர்.

 

மொத்த தேங்காய் உற்பத்தியில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் 90 சதவீத உற்பத்தி நடைபெறுகிறது. எஞ்சிய 10 சதவீத உற்பத்தி ஓரிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, அசாம், குஜராத் மற்றும் அந்தமானில் நடைபெறுகிறது.

 

கேரளாவுக்கு அடுத்து தமிழகத்தில் தான் அதிகளவு தேங்காய் உற்பத்தி நடைபெறுகிறது. தமிகத்தில் 389900 ஹெக்டேர் நிலப்பரப்பில் 5365 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.தமிழகத்தை பொருத்தவரை கோவை, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்கள் தேங்காய் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களில் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டிணம், ராமேஸ்வரம், மசூலிப்பட்டணம், கூடலூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தேங்காய் உற்பத்தி நடைபெறுகிறது. இங்கு வளர்ந்துள்ள தென்னை மரங்கள் கடலோர பகுதிகளில் சுற்றுச்சூலை மேம்படுத்துவதுடன், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுக்கவும் செய்கிறது.

 

தமிழகத்தில் 2016- 2017 ஆண்டுகளில் கடுமையாக வறட்சி நிலவியது. மழை அளவு குறைந்ததால் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டன. இதனால் விவசாயம் பொய்த்து போனது. விவசாயிகள் விவசாயத்துக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 

இதையடுத்து 32 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவித்தது. வறட்சியால் பாதிக்கப்பட்ட 32,30,101 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக 2247 கோடி வழங்கப்படும் என அரசு 21.2.2017-ல்   உத்தரவிட்டது. வறட்சி நிவாரண நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அரசு அறிவித்தது.


இந்நிலையில் தென்னை விவசாயிகளை பொருத்தவரை திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஏக்கருக்கு 18 ஆயிரம் வீதம் 227.862 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களை சேர்ந்த தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை.

 

மாநில அரசு 32 மவட்டங்களையும் வற்டசி பாதித்த மாவட்டங்களாக அறிவித்துள்ள போது தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் போது 11 மாவட்டங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கிவிட்டு எஞ்சிய 21 மாவட்ட தென்னை விவசாயிகளை புறக்கணிப்பது சட்டவிரோதம்.  எனவே தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் அடிப்படையில் தஞ்சாவூர் உள்பட 21 மாவட்டங்களை சேர்ந்த தென்னை விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரண நிதி வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.