Skip to main content

அண்ணா அறிவாலயத்தில் யஷ்வந்த் சின்ஹா!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Yashwant Sinha at Anna Arivalayam

 

தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவரின் தேர்தலுக்காக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கோரி இன்று காலை தமிழகம் வந்தார்.

 

அதைத் தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த அவருக்கு தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், அறிவாலயத்தில் நடைபெறும் விழாவில்  யஷ்வந்த் சின்ஹா, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து குடியரசுத் தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்ள இருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்