Skip to main content

மனிதநேயமும், சகோதரத்துவமும் தழைக்க நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும் - வைகோ

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

மக்களவை தேர்தலில்  புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தையும்,  தட்டாஞ்சாவடி சட்டமன்ற  தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனையும் ஆதரித்து புதுச்சேரியிலும், கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷை ஆதரித்து கடலூர் மாவட்டத்திலும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது; 

 

vaiko election campaign pondicherry

 

பாசிச போக்குடன் ஜனநாயகத்தை நடத்தி வருகின்றது மோடி அரசு. இந்திய நாட்டில் ஜனநாயகம் நீடிக்குமா? அல்லது பாசிசம் நீடிக்குமா என்ற கேள்வி தற்போதைய மக்களவை தேர்தலில் எழுந்துள்ளது. 
 

புதுச்சேரியில் ஜனநாயக படுகொலை செய்ய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க மூலம் மூன்று பேரை துணைநிலை ஆளுநர் நியமித்ததை மக்கள் அனைவரும் அறிவர். மாநில அந்தஸ்து இல்லாததால் 25% நிதி மட்டுமே அளிக்கப்படுகின்றது.
 

தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். பிரதமர் மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்றார். ஆனால், 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை. அதேபோல் அனைவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார். ஆனால் வங்கியில் குறைந்த பட்ச இருப்பு தொகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு ரூ.10 ஆயிரத்து 361 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக பன்னாட்டு கம்பெனிகள் வந்தபோது கமிஷன் கேட்டதால் அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். ஆக வேலையில்லா திண்டாட்டத்துக்கு இந்த அரசு ஒரு காரணம்.
 

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டினால் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பாழாகும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் குடிநீர் இல்லாமல் போகும், வீராணம் ஏரி வறண்டுபோய்விடும். மனிதநேயமும் சகோதரத்துவமும் தழைக்க நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.