Skip to main content

தூக்கத்திலும் சரி, தூங்கி எழுந்தபின்பும் சரி இதைத்தான் நாங்கள் சொல்லுவோம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
jayakumar450.jpg


 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடியவில்லை. அதற்குள்ளாக அவசரமாக கருத்துக்கூற அவசியம் இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. தூக்கத்திலும் சரி, தூங்கி எழுந்தபின்பும் சரி இதைத்தான் நாங்கள் சொல்லுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 
 

சென்னை ஓட்டேரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 
 

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பட்சத்தில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
 

ஜெயக்குமார்:- காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கவேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. அந்த காலக்கெடுவும் முடியவில்லை. இன்னும் 14 நாட்கள் உள்ளது. அதற்குள்ளாக அவசரமாக கருத்துக்கூற அவசியம் இல்லையே...
 

இதுதான் எங்கள் நிலைப்பாடு. தூக்கத்திலும் சரி, தூங்கி எழுந்தபின்பும் சரி இதைத்தான் நாங்கள் சொல்லுவோம்.
 

கேள்வி:- மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறதே?
 

ஜெயக்குமார்:- நமது எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை 10 நாட்கள் முடக்கி வைத்துள்ளனர். பாராளுமன்றம் வெளியேயும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. காவிரி விவகாரத்தில் கடுமையாக போராடி வரும் இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான். எனவே வழங்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தீர்ப்பை அமல்படுத்த செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தான் தரவேண்டுமே தவிர, இந்த விவகாரத்தில் ராஜினாமா செய்வது சரியில்லை. அது தேவையும் இல்லை.
 

கேள்வி:- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
 

ஜெயக்குமார்:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாவிட்டால்... என்ற கேள்வியே வேண்டாம். நேர்மறையான நம்பிக்கையான எண்ணங்கள் தான் வேண்டும். அந்த நம்பிக்கை அடிப்படையில் தான் நமது வாதங்களை அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருக்கிறோம்.
 

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நிலைப்பாடு என்பது கட்சியின் கொள்கை முடிவு. இதை நான் மட்டும் சொல்லிவிடமுடியாது. சரியான நேரத்தில் என்ன முடிவுகளை அறிவிப்பது? என கட்சி முடிவு செய்யும். தனிப்பட்ட யாரும் கருத்துக்கூற முடியாது. சரியான நேரத்தில் அந்த முடிவு வெளியாகும். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

துணி தைத்து கொடுத்து அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24)  வடசென்னை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெரம்பூர் வியாபாரிகள் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து அவர், ஓட்டேரியில் உள்ள தையல் கடையில் துணி தைத்துக் கொடுத்து வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு வாக்கு சேகரித்தார். 

Next Story

வடசென்னையில் வேட்புமனு தாக்கலின் போது நடந்தது என்ன? - ஜெயக்குமார் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Jayakumar has told what happened while filing nomination in North Chennai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வடசென்னை தொகுதி வேட்புமனு தாக்கலின் போது திமுக, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் மனோவும் போட்டியிடுகின்றனர். அதனால் இருவரும் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நிலையில், திமுகவிற்கு 2 ஆம் நம்பர் டோக்கனும், அதிமுகவுக்கு 7 ஆம் நம்பர் டோக்கனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

டோக்கன் வரிசைப்படி நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று அமைச்சர் சேகர் பாபுவும், முதலில் நாங்கள் தான் வந்தோம் அதனால் எங்களுக்குத்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் நேரடியாக வந்து டோக்கன் வாங்கியதாகவும், ஆனால் திமுக பினாமி மூலம் டோக்கன் வாங்கியதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதனால் அங்கு திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக அதிமுகவினர் முதலில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் 5 பேர் மட்டுமே அனுமதி., ஆனால் திமுக சார்பில் அமைச்சர் சேகர் பாபு, வேட்பாளர், மேயர் பிரியா உள்ளிட்ட 20 பேரை அலுவலகத்திற்கு உள்ளே அனுமதித்துள்ளனர். நான் முதலில் இங்கே வந்தேன் அப்போது, வேட்புமனு டோக்கன் கேட்டேன். ஆனால் அலுவலர் வேட்பாளரிடம் தான் டோக்கன் வழங்குவோம் என்று தெரிவித்தார். நானும் சரி என்று வந்துவிட்டேன். ஆனால், எங்கள் வேட்பாளர் மனோ வந்தவுடன் 7 ஆம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டது. எங்களுக்கு பிறகுதான் திமுக வேட்பாளர்கள் வந்தார்கள் அவர்களுக்கு 8 ஆம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் எங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றனர்.

திமுகவினர், வேட்பாளர்கள் வருவதற்கு முன்பே டம்பி வேட்பாளர் மூலம் 2 ஆம் நம்பர் டோக்கன் வாங்கியுள்ளனர். அதனால் நாங்கள் தான் முறையாக வந்தோம்; நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்றோம். ஆனால் திமுகவினர் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றனர். பின்பு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் நடந்ததை கூறினார். பின்பு தலைமை தேர்தல் அதிகாரி, முதலில் அதிமுக தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்தோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு உள்ளே இருந்த தேர்தல் அதிகாரிகளை மிரட்டினார்” என்றார்.