Skip to main content

இந்தியாவின் அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் இவர் மீது தான்- யோகி ஆதித்யநாத் பேச்சு

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

 

aad

 

டிசம்பர் 7 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் இன்று ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத் "ராமர் கோவில் கட்டப்பட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது அவர் பேசியதற்காக இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தும்" என கூறினார். அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் அவரது நட்பு தலைவர்களால் கூட அவரை காப்பாற்ற முடியாது என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்