Skip to main content

ஆட்சியில் உள்ள முதல்வரை இறந்தார் என காட்டும் விக்கிபீடியா!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
manoharparrikar

 

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான கோவாவின் முதலமைச்சராக இருப்பவர் மனோகர் பாரிக்கர். இவர் இறந்த நாள் இன்று என விக்கிபீடியா வின் மாதந்திர நாள் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலத்தை சேர்ந்தவர் மனோகர் பாரிக்கர். 2014ல் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தபோது, பிரதமர் மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார் மனோகர்பாரிக்கர். 2017ல் கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கோவா மாநிலத்தில் ஆட்சியமைத்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த மனோகர்பாரிக்கர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். தற்போது முதல்வராக பதவி வகித்து வருகிறார். குடும்பத்துடன் கோவாவில் வசித்து வருகிறார்.


 

wiki



இந்நிலையில் விக்கிபீடியாவின் தளத்தின் தமிழ் பக்கத்தில் இன்று மார்ச் 14ந்தேதி இறந்தவர்கள் பட்டியலில் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு தினத்தை பற்றிய தகவல்களை விக்கிபீடியா வழங்கும். அதன்படி இன்று உலகத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், உலகத்தில் முக்கியமானவர்களின் பிறந்தநாள், இறந்தநாள் பற்றிய தகவல்கள் இடம்பெறும். இறந்தவர்கள் வரிசையில் 1955ல் மனோகர்பாரிக்கர் – இந்திய அரசியல்வாதி, கோவா முதல்வர் என வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பெயரை க்ளிக் செய்து உள்ளே சென்றால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. 1955 டிசம்பர் 13ந்தேதி பிறந்தார் என்றும், அவரது அரசியல், குடும்பம் பற்றிய தகவல்கள் அதில் கிடைக்கின்றன. அவர் இறந்த ஆண்டு பற்றிய குறிப்பு அதில்யில்லை என்பது குறிப்பிடதக்கது. தவறுதலாக பதிவானதா அல்லது திட்டமிட்டே யாராவது அப்படி உருவாக்கினார்களா என்பது தெரியவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.